Sunday, March 23, 2008

சுபிட்சம் தரும் விஷு வருடம்

சுபிட்சம் தரும் விஷு வருடம்

விஷு வருஷ பலன் வெண்பா

பாரில் விஷு வருடம் பாலருக்குப் பீடை உண்டாம்
கார் பொழிவதில்லை முற் காலத்தில் - ஏரி
பெருகாது பிற்காலம் பெய்யுமே மாரி
இருகால முஞ்சமனென் றென்.

இதன் பொருள்:

இந்த விஷு வருடத்தில் உலகில் குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள். வருடத்தின் முற்பகுதியில் மழை பெய்யாது. ஏரிகளும்,குளங்களும் வற்றும் நிலை ஏற்படும்.

வருடத்தின் பிற் பகுதியில் மழை அமோகமாகப் பெய்யும். விளைச்சல்கள் அதிகரிக்கும்.முற் பகுதியில் குழந்தைகளுக்குப் பிணி, மழையின்மை என்றுசங்கடங்கள் நிறைந்தாலும் மொத்தத்தில் மக்களுடைய பொருளாதார வசதி மேம்பட்டே இருக்கும்.

பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட வெண்பா, முற்பகுதியில் மழையில்லை. பிற்பகுதியில் மழை உண்டு என்று சொல்லி மொத்தத்தில் இருபகுதிகளும் சமமாகும் என இந்த வெண்பா குறிப்பிடுகிறது.

விஷு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதம். வெள்ளிக்கிழமை இரவு 9 மணி 32 நிமிடங்களுக்கு பிறக்கிறது. இந்த நேரத்தில் மாதம்பிறப்பதால் உலகிற்கு நன்மைதான் இருக்கும். உலகம் சுபிட்சமாக இருக்கும்.

click here
மேலும் படிக்க..

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்:

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்

வேப்பம்பூ பச்சடி:

புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ பச்சடிக்கு தனி இடம் உண்டு. வாழ்வில் இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும். ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது.

எல்லாவற்றையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டு ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் முக்கியமான சுவை கொண்டவற்றைகொண்டு வேப்பம்பூ பச்சடி செய்யப்படுகிறது.

தேவையானவை:

மாங்காய் : 2

வெல்லம் : தேவையான அளவு

வேப்பம்பூ : சிறிதளவு

உப்பு : தேவையான அளவு

பச்சைமிளகாய் ; 5

செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வேப்பம்பூவை கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு நீரில் வெலத்தை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மாங்காயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயை வதக்கி மாங்காயில் போட்டு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன் சேர்த்து கலக்கிஅடுப்பில் வைத்து சூடாக்கவும்.

இதனுடன் உப்பை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து, புத்தாண்டு விருந்துடன் இதையும் சேர்த்து பரிமாறி, நீங்களும் சாப்பிடுங்கள்.

வேப்பம்பூ பச்சடி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

click here
மேலும் படிக்க..

தமிழ் புத்தாண்டு

கிரகங்களில் முதன்மை கிரகம் சூரியன். சூரியனையே அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் மட்டுமல்ல, தமிழ் புத்தாண்டும் கூட ஒரு வகையில் சூரியனுக்கு எடுக்கப்படும் விழா தான்.

சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் தான் புத்தாண்டே கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.

கிரகங்கள் அனைத்திற்கும் தலைமை கிரகம் சூரியன். எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கிறன். தமிழ் நாட்டில் மட்டும்தான்சூரியனுக்கென்று தனி விழாக்கள் எடுக்கப்படுகின்றன.

ஜாதகம் கணிப்பது சூரியனின் உதய, அஸ்தமன அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.

தமிழகத்தின் தமிழ் புத்தாண்டு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளன்று கொண்டடாப்படுகிறது.

மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அவை மேஷராசியில் தொடங்கி மீன ராசியில் முடியும். கிரகங்களின் சுழற்சி கணக்கின்படி சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொருராசிக்கு செல்ல 1 மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வது 'சங்கரமணம்' என அழைக்கப்படுகிறது. 'மாத சங்கரமணம்'என்பது மாதப் பிறப்பாகும். சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில்பிரவேசிப்பது 'வருட சங்கரமணம்'. இது வருடப்பிறப்பாக, புத்தாண்டாககொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் சூரியனின் சுழற்சி அடிப்படையிலேயே நல்ல நாள், நேரங்கள், முகூர்த்தங்கள்ஆகிய அனைத்தையம் கணக்கிடுவது வழக்கமாக உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று காலை பஞ்சாங்கத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி பூஜையில்வைக்கப்பார்கள். மாலை பூஜையிலிருந்து எடுத்து பஞ்சாங்கத்தை படிக்கும் வழக்கம்பலநூறு வருடங்களாக இருந்து வருகிறது.

பஞ்சாஙகத்தின் உதவி கொண்டே நல்ல நாள், நேரம், திருமண பொருத்தங்கள் போன்றவைகூறப்படுகின்றன. இதன் காரணமாக பஞ்சாங்கம் தமிழர்களுக்கு மிக இன்றியமையாததாகஉள்ளது.

புதுவருட நாளன்று வீடுகளில் மாக்கோலம் போடப்படும். மாவிலைத் தோரணங்கள்கட்டப்பட்டு வீடுகள் அலங்கரிக்கப்படும்.

புத்தாண்டு நல்லது நடந்தால் வருடம் முழுவதும் நல்லது நடக்கும் என கருதப்படுவதால்,அன்று பலரும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவார்கள். கோவில்களிலும்புது வருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வரவிருக்கும் விஷு ஆண்டில் எல்லாம் நல்லதாக நடக்க இறைவனை வழிபடுவோம்.

நாட்கள் என்னும் பூக்கள் சிந்தும் புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!

click here
மேலும் படிக்க..

Thursday, February 28, 2008

Yaaradi Nee Mohini Gallery

Yaaradi Nee Mohini
Direction : Mithran R Jawahar
Production : N.V. Prasad, Shanam Naga Ashok Kumar
Script : Selvaraghavan
Starring : Dhanush, Nayantara, Karthik Kumar, Raghuvaran
Music : Yuvan Shankar Raja
Cinematography : Bala Murugan

Yaaradi Nee Mohini is a Tamil remake of Telugu film Aadavari Matalaku Ardhalu Verule. Dhanush and Nayantara play the lead role. Karthik Kumar is also in the cast.The music for the film will be scored by Yuvan Shankar Raja. The film is directed by Mithran R Jawahar.

Yaradi Nee Mohini deals with a family theme. Different from Pollaadhavan that was an action flick, Yaradi… will explore relationships.

Exclusive Collection ~By karthikeyan

















click here
மேலும் படிக்க..

Monday, February 25, 2008

Google Current Gothram



Which was published in May 18, 2006

click here
மேலும் படிக்க..