Showing posts with label சுபிட்சம் தரும் விஷு வருடம். Show all posts
Showing posts with label சுபிட்சம் தரும் விஷு வருடம். Show all posts

Sunday, March 23, 2008

சுபிட்சம் தரும் விஷு வருடம்

சுபிட்சம் தரும் விஷு வருடம்

விஷு வருஷ பலன் வெண்பா

பாரில் விஷு வருடம் பாலருக்குப் பீடை உண்டாம்
கார் பொழிவதில்லை முற் காலத்தில் - ஏரி
பெருகாது பிற்காலம் பெய்யுமே மாரி
இருகால முஞ்சமனென் றென்.

இதன் பொருள்:

இந்த விஷு வருடத்தில் உலகில் குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள். வருடத்தின் முற்பகுதியில் மழை பெய்யாது. ஏரிகளும்,குளங்களும் வற்றும் நிலை ஏற்படும்.

வருடத்தின் பிற் பகுதியில் மழை அமோகமாகப் பெய்யும். விளைச்சல்கள் அதிகரிக்கும்.முற் பகுதியில் குழந்தைகளுக்குப் பிணி, மழையின்மை என்றுசங்கடங்கள் நிறைந்தாலும் மொத்தத்தில் மக்களுடைய பொருளாதார வசதி மேம்பட்டே இருக்கும்.

பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட வெண்பா, முற்பகுதியில் மழையில்லை. பிற்பகுதியில் மழை உண்டு என்று சொல்லி மொத்தத்தில் இருபகுதிகளும் சமமாகும் என இந்த வெண்பா குறிப்பிடுகிறது.

விஷு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதம். வெள்ளிக்கிழமை இரவு 9 மணி 32 நிமிடங்களுக்கு பிறக்கிறது. இந்த நேரத்தில் மாதம்பிறப்பதால் உலகிற்கு நன்மைதான் இருக்கும். உலகம் சுபிட்சமாக இருக்கும்.

click here
மேலும் படிக்க..