Monday, April 28, 2008

பிஎஸ்எல்வி: 10 சாட்டிலைட்களையும் வெற்றிகரமாய் ஏவியது

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் " என்ற பழமொழி இப்பொழுது
"வீட்டுக்கு ஒரு கணினி வாங்குவோம் " என்ற பழமொழிக்கு உகந்தையாக
இஸ்ரோ அமைப்பு உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) இன்று சாதனை படைத்தது.

இதற்க்கு முன் ரஷ்ய நாட்டு விண்கலம் பதினான்கு செயற்கைகோள் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது .

ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக பிரியத் தொடங்கிவிட்டன. முதலில் கார்டோசாட், ஐஎம்எஸ் ஆகிய செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணி்ல் ரிலீஸ் செய்தது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 8 நானே செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தியது.

இப்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும் பணியில் இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில், 10 செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிடப்பட்டது.

அதன்படி கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என்று 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.

8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையது. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ.

இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் ஹைபர்ஸ்பெக்டரல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

சனிக்கிழமை கவுன்ட்டவுன் தொடங்கியது. இன்று காலை 9.23 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இதையடுத்து வரிசையாக 10 சாட்டிலைட்களையும் புவி வட்டப் பாதையில் பி.எஸ்.எல்.வி. வரிசையாக ஏவியது.

இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும். உலக அளவில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 8 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது. ஏரியான் 7 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. அமெரிக்கா ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4 செயற்கைக் கோள்களை மட்டுமே அனுப்புவது வழக்கம்.

உலக சாதனை:

இந்த வகையில் இஸ்ரோ உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்டதும் முதலில் கார்ட்டோஸாட்-2ஏ விண்ணில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு செயற்கைக் கோளாக நிலை நிறுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 100 விநாடிகள் பிடிக்குமாம். அதாவது 1000 விநாடிகளுக்குள் 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

திருப்பதியில் மாதவன் நாயர்:

முன்னதாக பி.எஸ்.எல்.வி -சி9 சிறப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார்.

சனிக்கிழமை இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளை மாதவன் நாயர் மேற்கொண்டார். நேற்று காலை சுப்ரபாத நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.

செய்திகள் : தட்ஸ்தமிழ் (நன்றி தட்ஸ்தமிழ் )

click here
மேலும் படிக்க..

நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ?

நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ? ஆம் என்றால் நீங்கள் பாதுகாப்பு விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .

நீங்கள் மின் அஞ்சலுக்கு செல்லும் முன் உங்கள் பூட்டு (username) சாவி (password) ஆகியவற்றை கொடுத்து உள்ளே செல்வீர்கள் . அப்பொழுது அங்கே சாவியை நினைவு கொள் (Remember Password ) என்னும் பெட்டி காணப்படும் அதில் நீங்கள் (check) செய்து விட்டால் அவ்வளவுதான் நீங்கள் அந்த கணினியை விட்டு சென்ற பின் உங்கள் சாவி (password) எளிதாக மற்றவர்களால் அறிய முடியும் .
இந்த படத்தை பாருங்கள் .

கிழே குறிப்பிட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட்டை முகவரி இடத்தில் கொடுத்து பாருங்கள்

javascript:alert(document.forms[0].passwd.value); (For yahoo)

javascript:alert(document.forms[0].Passwd.value); (For Gmail)

யாஹூ டெஸ்ட்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Yahoo_hack.png


ஜிமெயில் டெஸ்ட்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Gmail_Hack.png

click here
மேலும் படிக்க..

Sunday, April 27, 2008

ஒரே ராக்கெட்டில் 10 சாட்டிலைட்டுகள்

சென்னை: பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் நாளை 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி9 ராக்கெட் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்து செயற்கைக் கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இஸ்ரோவின் வரலாற்றில் ஒரே ராக்கெட் மூலம் பத்து செயற்கைக் கோள்கள் ஏவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாளை காலை 9.20 மணிக்கு சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும்.

கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் ஏவப்படுகிறது.

8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையதாகும். இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கைகோள்களின் மொத்த எடை 50 கிலோ.

இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது.

நேற்று இரவு ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. இதுவரை திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செய்திகள் : தட்ஸ்தமிழ்

click here
மேலும் படிக்க..

தசாவதாரம்

தசாவதாரம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஹாலிவுட் ஹீரோ ஜாகிசான் வந்தார் . மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழாவில் பெரும் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கு பெற்றனர் . இதில் கமல் ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ளார் . பாடல்களும் அருமையாக அமைத்துள்ளது .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/dd.png

click here
மேலும் படிக்க..

கூகிள் இந்தியா

நீங்கள் கூகிள் இந்தியா சென்று தமிழ் மொழியை தேர்வு செய்து தேடல் செய்து பார்த்திர்களா ?
இப்பொழுது கூகிள் இந்தியா தமிழிலே தேடும் வசதியை தந்துள்ளது . நீங்கள் ஆங்கிலத்தில் வார்த்தைகளை தட்டச்சில் அடிக்க உடனே அதற்க்கு ஏற்ற தமிழ் வார்த்தைகள் தமிழில் காட்டுகிறது . இந்த வசதி சில நாட்களாக தான் இருக்கிறது .
http://www.google.co.in
இந்த சுட்டியை சென்று பார்க்கவும் .

இப்படி தான் இருக்கும் இதோ இந்த படத்தை பாருங்கள்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/thamil.png

click here
மேலும் படிக்க..

Sunday, April 20, 2008

பயம் எதற்கு?�

பயம் எதற்கு?�
*ரோஜாவுக்கு ஆசைப்படுபவன்�
முள்ளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*தாழம்பூவுக்கு ஆசைப்படுபவன்�
பூநாகம் கண்டு பயந்துவிடக்கூடாது�
*வெற்றிக்கு ஆசைப்படுபவன்�
தோல்வி கண்டு பயந்துவிடக்கூடாது�
*விடியலைக் காண ஆசைப்படுபவன்�
இருளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*கடலில் நீந்த ஆசைப்படுபவன்�
ஆழம் கண்டு பயந்துவிடக்கூடாது�
அதுபோல........�
*காதலிக்க ஆசைப்படுபவன்�
எதிர்ப்புகளை கண்டு பயந்துவிடக்கூடாது !�

----- கவின்

click here
மேலும் படிக்க..

Friday, April 18, 2008

மோகினி கிளைமாக்ஸ் மாற்றம்

யாரடி நீ மோகினி' படத்தின் கிளைமாக்ஸ் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததால் படத்தின் கிளைமாக்ஸை மாற்ற உத்தரவிட்டுள்ளாராம் தனுஷின் தந்தையும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா.

செல்வராகவனின் உதவியாளரான ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நயனதாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் யாரடி நீ மோகினி. படம் குறித்து பொதுவாக பாசிட்டிவான பேச்சு நிலவுகிறது. இருப்பினும் கிளைமாக்ஸ் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுதந்துள்ளன.

இதையடுத்து கிளைமாக்ஸை மாற்றுமாறு ஜவஹரை கஸ்தூரி ராஜா கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தெலுங்கில் இதே கிளைமாக்ஸை வைத்தவரான இயக்குநர் செல்வராகவனிடம் ஆலோசனை செய்துள்ளார் ஜவஹர். இதையடுத்து அவரது ஆலோசனைப்படி கிளைமாக்ஸை அவர் மாற்றியுள்ளதாக தெரிகிறது.

செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய அடவரி மடலுக்கு அர்த்தலே வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழிலும் சூப்பர் ஹிட் ரேஞ்சை எட்டிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் கிளைமாக்ஸில் நயனதாரவும், தனுஷும் கல்யாணம் செய்து கொள்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனராம். இதையடுத்தே கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று கஸ்தூரி ராஜா விரும்பினாராம்.

தற்போது சில காட்சிகளை எடிட் செய்து, புதிதாக சில காட்சிகளை சேர்த்து, நயனதாராவின் பெற்றோர் விருப்பப்படி அவரை தனுஷ் மணப்பது போல காட்சியை மாற்றியுள்ளனராம்.

click here
மேலும் படிக்க..

நேபாளி'க்கு போலீஸ் நோட்டீஸ்

நேபாளி படத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல உள்ள காட்சிகளை உடனடியாக நீக்குமாறு அப்படத்தின் இயக்குநர் வி.இசட். துரைக்கு வட சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவி வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளார்.

பரத், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து வெளியாகியுள்ள படம் நேபாளி. இப்பத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல காட்சிகள் உள்ளதாக சர்ச்ைச எழுந்துள்ளது.

இதையடுத்து இயக்குநர் துரைக்கு வட சென்னை காவல் இணை ஆணையர் ரவி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து இணை ஆணையர் ரவி கூறுகையில், நேபாளி படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. விசாரணை நடத்தப்போகும் இன்ஸ்பெக்டர் கதாநாயகியை கற்பழிப்பது போலவும், அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜட்டியோடு நிற்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

போலீசை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த படத்திற்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் சென்சார் போர்டுக்கும், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.

நேபாளி படத்தை பார்ப்பவர்களுக்கு போலீசாரை பற்றி மிகவும் தவறான எண்ணம் ஏற்படும். விசாரணைக்கு வரும் போலீசார் மீது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

போலீஸ் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அனுமதியோடு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ரவி.

இதற்கிடையே, நேபாளி படம் நீளமாக இருப்பதாகவும், பல காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும் பேச்சு எழுந்ததால், அப்செட் ஆன பரத், இயக்குநர் துரையிடம் தேவையில்லாத காட்சிகளை வெட்டி விடுமாறு கோரிக்கை விடுத்தாராம்.

குறிப்பாக சீரியல் கொலைகளுக்கான காரணம் குறித்து படத்தில் சரியான விளக்கம் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதையும் சரி செய்யுமாறு துரையிடம் பரத் கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து படத்தின் 2ம் பகுதியில் பல காட்சிகளை நீக்கியுள்ளாராம் துரை. இதன் மூலம் படத்தின் பிற்பாகுதியில் குறைவாக இருந்த விறுவிறுப்பு தற்போது கூடியுள்ளதாம்.

click here
மேலும் படிக்க..

Kuruvi Film

After the film Azhagiya Tamil Magan, Vijay’s next venture is Kuruvi. The film’s director is Dharani who gives a super hit film for Actor Vijay in the film “Gilli” is ready to give another hit. Vijay’s fans are eagerly waiting for his next film. Dharani is meant for giving super hit fast track films, hope his combination with illayathalapathy Vijay works again.

Download Kuruvi Song here

Happy New Year - Sunidhi Chauhan,Yogi B, Dr Burn Year

Dandaana Darna - Sangeeth Althipur

Thaen thaen thaen - Udit Narayanan, Shreya Ghoshal

Palaanadhu Palaanadhu - Vidhyasagar, S Rajalakshmi

Theme Music - Praveen Mani,Dr Burn,Renina,Suvi

Mozha Mozhannu - KK, Anuradha Sriram


click here
மேலும் படிக்க..