Tuesday, January 29, 2008

Yaridi nee mohini Trailer

click here
மேலும் படிக்க..

Sunday, January 27, 2008

Sadhu Mirandaa Trailer

Movie: Sadhu Mirandaa
Cast: Prasanna, Kavya Madhavan, Abbas, Kalabavan Mani, Kanja Karuppu, Karunas, & Others
Direction:Siddhique
Production: Alka Film Corporation
Music: Deepak Dev



click here
மேலும் படிக்க..

Saturday, January 26, 2008

மீண்டும் ரஜினி ஜோடி நயனதாரா!

குசேலன் படத்தில் ரஜினிகாந்த்துடன் மீண்டும் நயனாரா ஜோடி சேரவுள்ளார்.

இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகும் படம் குசேலன். மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தின் ரீமேக்தான் இப்படம்.

மலையாளத்தில் மம்முட்டி, சீனிவாசன், மீனா முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மம்முட்டி நடிகராக நடித்திருந்தார். அவரது பால்ய காலத் தோழனாக, சவரத் தொழிலாளி வேடத்தில் சீனிவாசனும், சீனிவாசனின் மனைவியாக மீனாவும் நடித்திருந்தனர்.

தமிழில் உருவாகவுள்ள குசேலனில் ரஜினியும், அவரது தோழனாக பசுபதியும் நடிக்கவுள்ளனர். பசுபதியின் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் சிம்ரனை முயன்றனர். ஆனால் அவர் அதிக சம்பளம் மற்றும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டதால் இப்போது தபுவை கேட்டு வருகின்றனர். அதேபோல சினேகாவையும் கேட்டு வருகின்றனராம்.

மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடி கிடையாது. ஆனால் ரஜினிக்கு ஜோடி இல்லாமல் நடிக்க வைக்க முடியுமா?. எனவே அவருக்கு ஜோடியை உருவாக்கியுள்ளனர். அந்த ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.

ரஜினியுடன் நயனதாரா சேருவது இது மூன்றாவது முறையாகும். முதல் படம் சந்திரமுகி. அதில் ஜோடி போட்டிருந்தார். 2வது சிவாஜியில் ஒரு பாட்டுக்கு ரஜினியுடன் ஆடியிருந்தார். இப்போது 3வது முறையாக குசேலன் படத்தில் அவரது ஜோடியாக நடிக்கவுள்ளார். குசேலன் தெலுங்குப் பதிப்பிலும் நயனதாராதான் நாயகியாக நடிக்கிறார்.

நயனதாரா குசேலனில் புக் ஆகியுள்ளது மற்றும் படம் குறித்த இதர முழு விவரங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.


தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், திரும்பி வந்த பிறகு படத்தின் முழு கலைஞர்கள் விவரமும் இறுதி செய்யப்படும். அதன் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.

click here
மேலும் படிக்க..

பானுப்பிரியா தம்பியை மணக்கும் விந்தியா!

http://img377.imageshack.us/img377/9132/vindhya13eu.jpg
நடிகை விந்தியாவுக்கும் நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது.

இவர்களது கல்யாணம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது.

மெல்லப் பேசுங்கள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பானுப்பிரியா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரது தம்பி கோபி என்கிற கோபாலகிருஷ்ணன். இவர் வாக்குமூலம் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

கோபிக்கும், நடிகை விந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது காதல் திருமணம் அல்ல, இரு வீட்டாரும் சேர்ந்து பேசி முடிவு செய்த திருமணமாம்.

விந்தியா சங்கமம் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார், சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆட்டமும் போட்டார்.

தற்போது அழகு நிலையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த விந்தியா, கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந் நிலையில் இவருக்கும் நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கோபி- விந்தியா திருமணம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிப்ரவரி 16ம் தேதி நடக்கிறது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பத்திரிக்கையாளர்களுக்காக சென்னையில் வரவேற்பு நடத்த தீர்மானித்துள்ளனராம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண ஏற்பாடுகளை விந்தியாவின் தந்தை யோகானந்த், பானுப்பிரியா, அவரது தங்கையும் முன்னாள் நடிகையுமான சாந்தி பிரியா (நிஷாந்தி) உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.

click here
மேலும் படிக்க..

Thursday, January 24, 2008

இனிமேல் தை 1ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு

சென்னை: தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,

தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாக கொண்டப்படும்.

இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.

click here
மேலும் படிக்க..

Saturday, January 19, 2008

sultan the warrior new 2008 trailer



sultan the warrior new 2008 trailer

click here
மேலும் படிக்க..

Indiralogathil Nan Alagapan Trailer


Vaidvelu in Indiralogathil Nan Alagapan

click here
மேலும் படிக்க..

Friday, January 18, 2008

Poondu Kulambu

click here
மேலும் படிக்க..

Exclusive Sandya Gallery

click here
மேலும் படிக்க..